வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த விவகாரம் : பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Apr 25 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த விவகாரத்தில், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைந்து ஆவணங்களை நகல் எடுத்ததாக வட்டாட்சியர் சம்பூர்ணம் மற்றும் பதிவுரு உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்திய சம்பூர்ணம் மற்றும் சீனிவாசன் மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த பிரச்னைக்கு பெண் காவல் அதிகாரியே காரணம் என்றும் தெரிவித்தனர்.