கரூரில் கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் : போலீசார் தடியடி நடத்தியதில் பெண்கள் உட்பட 20 பேர் பலத்த காயம்
Apr 26 2019 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதில் பெண்கள் உட்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
கரூர் புகலூர் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது, இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் - வேலூர் சாலையில் உள்ள புகலூர் நால்ரோடு என்ற இடத்தில், ஒரு பிரிவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மண்டை உடைந்தது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும், 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.