பொன்பரப்பியில் வன்முறை தாக்குதல் : சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Apr 24 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவின்போது இரு கூட்டணி கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினரின் வாழும் பகுதியில் உள்ள வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையினர் சேதமடைந்த அனைத்து வீடுகளிலும் உடைந்த ஓடுகளுக்கு பதிலாக புதிய ஓடுகளை வாங்கி வந்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து பொன்பரப்பி கிராமத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00