பொன்பரப்பியில் வன்முறை தாக்குதல் : சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
Apr 24 2019 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவின்போது இரு கூட்டணி கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினரின் வாழும் பகுதியில் உள்ள வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறையினர் சேதமடைந்த அனைத்து வீடுகளிலும் உடைந்த ஓடுகளுக்கு பதிலாக புதிய ஓடுகளை வாங்கி வந்து சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து பொன்பரப்பி கிராமத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.