மாண்புமிகு அம்மா, யாருடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார்களோ, அந்த கட்சியுடன் எடப்பாடி அணியினர் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்ட திரு. டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு பவானி சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு இடங்களுக்குச் சென்றார். அவருக்கு, வழியெங்கும், ஏராளமான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈரோடு மாநகர் மாவட்டம் வீரப்பாளையத்தில், அருள் மற்றும் வீட் டிரஸ்ட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களிடையே உரையாற்றிய திரு. டிடிவி தினகரன், 2 அறக்கட்டளைகளைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர், ஒரே நேரத்தில் கழகத்தில் இணைவது மிகுந்த வரவேற்புக்குரியது எனத் தெரிவித்தார்.
செல்வம் நகரில், எடப்பாடி அணியினர், தி.மு.க. மற்றும் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இதனையடுத்து, மரப்பாலம் சென்ற திரு. டிடிவி தினகரனுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த திரளான பெண்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளங்கள் முழங்க, எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் வரவேற்புக்கிடையே எழுச்சியுரையாற்றிய திரு. டிடிவி தினகரன், தமிழக மக்கள், என்றைக்கும் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.
இதனையடுத்து கனிராவத்தர்குளம் பகுதிக்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருச்சக்கர வாகன அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கனிராவத்தர்குளம் பகுதியில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை ஆற்றிய திரு. டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மா, யாருடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார்களோ, அந்த கட்சியுடன் எடப்பாடி அணியினர் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
கவுந்தப்பாடிக்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மேளதாளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அப்போது உரையாற்றிய டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து, ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை அவர் ஏற்றி வைத்தார்.
திரு. டிடிவி தினகரன், ஆப்பக்கூடல் பகுதிக்கு வருகை தந்தபோது, பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே பேசிய திரு டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை கொடுக்க முடியும் என கூறினார்.
பவானி செல்லும் வழியில் சீரபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மக மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்த திரு டிடிவி தினகரனுக்கு, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திருக்கோயிலில் நடைபெறும் ராகு - கேது பெயர்ச்சி யாக வேள்வி நிகழ்வில். அவர் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பவானி பகுதிக்கு வருகை தந்த திரு டிடிவி தினகரனுக்கு, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய திரு. டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மா வழியில் துணிச்சலோடு, யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, அனைவரும் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.