நீலகிரி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா : யானை பூஜை நிகழ்வு நடைபெறாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
Jan 17 2019 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் யானை பூஜை செய்யும் நிகழ்வு நடைபெறாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. யானைகள் உணவுக்கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. பொங்கல், சாதம், ராகி, சத்து மாவு, வெல்லம், பழங்கள், தர்பூசணி, கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொங்கல் விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. இதனால் வழக்கமாக நடைபெறும் யானை பூஜையை காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிகழ்ச்சியில், முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் கலந்து கொண்டனர்.