கண்களை கட்டிக்கொண்டு 35 கி.மீ தூரம் மிதிவண்டி ஓட்டி புதிய சாதனை படைத்த சிறுவன்
Jan 8 2020 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு 9 வயது சிறுவன் 35 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஆசிவ் என்ற மாணவன், கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காக பலமுறை கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளார். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மிதிவண்டியில் கண்களை கட்டிக் கொண்டு சுமார் 35 கிலோமீட்டர் தூரம் அவர் பயணம் செய்துள்ளார். 20 கிலோ மீட்டர் தூரம் இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், 35 கிலோ மீட்டர் கண்களை கட்டிக் கொண்டு மிதி வண்டி ஓட்டி சாதனை செய்து அசத்தியுள்ளார். சிறுவனின் இந்த சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது.