பெரம்பலூரில் 9ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு - ஒருவர் தலைமறைவு
Dec 14 2019 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாசம் - அந்தோணியம்மாள் தம்பதியின் மகள் அருகிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மகேந்திரன், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.