தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்
Dec 14 2019 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், சேலம், ராமநாதபுரம், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.