விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை

Dec 12 2019 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விடுவதை தடுத்த தனியார் வங்கி மேலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக ஊர்க்கூட்டம் நடத்தியுள்ளனர். இக்கூட்டத்தில் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் திரு. ராமசுப்பு என்பவரை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்துள்ளர்கள். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் சதிஷ்குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அங்கு பெரும் கூச்சல் குழப்பம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து சதிஷ்குமார் ஆளும்கட்சி பிரமுகர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்‍கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் ஏழாயிரம் பண்ணை பகுதி மக்‍களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00