குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது
Dec 12 2019 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த புகாரின் பேரில் திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோ தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காவல் ஏடிஜிபி திரு. ரவி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களின் புழக்கங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. திருச்சியில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் அதிகமாக பதிவேற்றம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார், கிறிஸ்டோபர் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.