தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல் - மதுரையில் சிகிச்சைப் பலனின்றி 10 வயது சிறுவன் பலி
Dec 8 2019 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை திருமங்கலம் அருகே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே எஸ்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த திரு.இளையராஜா என்பவரின் மகன் துரை மகாராஜன், தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி துரை மகாராஜன் இன்று காலை உயிரிழந்ததால் அவனது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிறுவனின் உடல் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.