தமிழகத்தில் ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - மாநில அரசின் சூழ்ச்சிகளை முறியடித்து தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெறும் என திட்டவட்டம்
Dec 8 2019 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற ஆட்சியாளர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக, ஆளுங்கட்சியினர் மேற்கொள்ளும் அனைத்து சூழ்ச்சிகளை முறியடித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.