சென்னை அருகே மதில் சுவர் எழுப்பப்பட்ட விவகாரம் : சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

Dec 6 2019 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து, முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் பகுதியில், கெங்கையம்மன் கோயிலுக்‍கு பின்புறம், ஏழு அடி உயரமுள்ள மதில் சுவரை எழுப்பி வருகிறார். இந்த சுவர் எழுப்பும் பணியில், தொழிலாளர் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். திடீரென சுவர் இடிந்து விழுந்தபோது, ஏழு பேரும் சுவரின் அடியில் சிக்‍கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி செல்லப்பன் என்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அண்மையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00