திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
Dec 5 2019 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 11-ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், வரும் 9ம் தேதிமுதல் 12ம் தேதி வரை பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம், அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையிலிருந்து சுமார் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்து 112 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.