மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் நாளை அறுவை சிகிச்சை - துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு
Nov 21 2019 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக, மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த விபத்தின்போது, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, காலில் பொருத்தப்பட்ட கம்பியை அகற்றுவதற்காக நாளை அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பின்பு, நடிகர் கமல்ஹாசன் தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.