நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் மண் சரிவுகள் : வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
Nov 17 2019 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஜீப் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன.
குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நேற்றிரவு பல மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால், குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டன. ஏராளமான மரங்களும் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், குன்னூர்-கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ள நீர் புகுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஜீப் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.
மலை ரயில் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி ரயில் 2வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.