கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி : சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை
Nov 15 2019 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி கோவில்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் 4 வயது மகன் பிரவீன்குமார், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான். இது தொடர்ப்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.