கரூர் அருகே பள்ளி வளாகத்திலேயே மாணவி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் பெற்றோர் புகார்
Nov 12 2019 7:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் அருகே பள்ளி வளாகத்திலேயே மாணவி உயிரிழந்ததில், மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கரூர் வடக்கு பசுபதி பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் கோமதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆரோக்கியமாக பள்ளிக்குச் சென்ற தங்களது மகள் எப்படி திடீரென்று உயிரிழக்க முடியும்? என கேள்வி எழுப்பிய பெற்றோர், உடற்கூறு ஆய்வு முடிந்து கோமதியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, கோமதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.