நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு ஜாமின் மறுப்பு - குற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
Oct 15 2019 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மாணவர் உதித்சூர்யாவுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் உதித்சூர்யா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உதித்சூர்யா கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்ற போதிலும், அவரை நீதிமன்றக் காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி. முன்வராதது ஏன் என நீதிபதி திரு. ஜி.ஆர். சாமிநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் தவறு நடந்திருப்பது உறுதியாகிறது என்றும் நீதிபதி அப்போது குறிப்பிட்டார்.
உதித்சூர்யாவின் தந்தைக்கு ஜாமின் கோரும் வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு மாற்றப்பட்டால், மாணவருக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.