தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு வினியோகம் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Oct 15 2019 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்‍குடி மாவட்டம் ஆத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.புவனேஸவரன், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலாளர் திரு.சேக்தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.கோமுகி மணியன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் திரு.பால்ராஜ், ஒன்றிய கழக செயலாளர் திரு.ராஜேந்திரன், நகர செயலாளர் திரு.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியக்கழகம் சார்பில், மணக்குடி கடை வீதியில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக்கழக செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன், மாவட்ட அவைத் தலைவர் திரு.ஆறுமுகம், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.அன்னதாஸ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் மாநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பயணிகள், மாணவ- மாணவியர்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.K.T.பச்சைமால், அம்மா பேரவை துணை செயலாளர் திரு.லட்சுமணன், மாநகர கழக செயலாளர் அக்சயா கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் திருமங்கலம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி மற்றும் பாசிப்பயறு வழங்கப்பட்டது. மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு. இ.மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.மணிவேல் மற்றும் ஒன்றியக்‍ கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் நில வேம்பு அருந்திச் சென்றனர்.

விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய நகரக்‍ கழகம் சார்பில் பாப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக்‍கழகம் சார்பில் காமராஜ் சிலை அருகே பொதுமக்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.எதிர்கோட்டை S.G. சுப்பிரமணியன் தலைமையில் கழக நிர்வாகிகள் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00