தூத்துக்‍குடி துப்பாக்‍கிச் சூடு வழக்‍கு - நிலை அறிக்‍கை தாக்‍கல் செய்ய சி.பி.ஐ.க்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 14 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்‍கவேண்டுமென சிபிஐ-க்‍கு கடந்த 2018ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, துப்பாக்‍கிச்சூடு தொடர்பாக தொழில்நுட்பம் குறித்த 160 ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைத்துள்ளதாகவும் சிபிஐ தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவிக்‍கப்பட்டது. மேலும் 300 நபர்களிடம் விசாரணை நடத்தியதன் மூலம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், மையக்பொருள் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்பதால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ​

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் விசாரணை குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00