தமிழக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி - சென்னை தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Oct 14 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தலைமைச் செயலகத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்ய பிரதா சாஹு ஆலோசனை மேற்கொண்டார்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக, திரு. சமயமூர்த்தி, திருமதி. ஜோதி நிர்மலாசாமி, திரு. விஜய்குமார், திரு. சிவசண்முக ராஜா, திரு. T.P. ராஜேஷ், திரு. சம்பத், திரு. கருணாகரன், திரு. நடராஜன், திரு. சஜ்ஜன்சிங், திரு. ஞானசேகரன் ஆகிய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்ய பிரதா சாஹு, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வாக்காளர் பட்டியலில் திருத்தம், சேர்ப்புக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாகவும், ஒரு கோடியே 64 லட்சம் வாக்காளர்களின் பெயர் திருத்தம், மாற்றம் குறித்து சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் நம்பவம் 25-ம் தேதி வெளியிடப்படும் என்றும், வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்படும் என்றும் ஆலோசனையின்போது திரு. சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.