திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆழ்துளை கிணறுகளை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்பு
Sep 17 2019 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் ஆழ்துளை கிணறுகளை அகற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்குன்றம் அருகே நல்லூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, சிலர் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராட்சத குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்தும், ஆழ்துளை கிண்றுகளை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில், காலிக் குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.