5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு கண்டனம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்
Sep 17 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. வேல்முருகன், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது, இபிஎஸ் அரசு மத்திய அரசுக்கு அடிமையாகத்தான் உள்ளது என்பதை நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.