சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிக்கக்கோரி பேரணி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் - அரசுக்கு எதிர்ப்பு
Sep 17 2019 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தேவர்குளம், குருக்கள்பட்டி, வன்னிக்கோனேந்தல், திருவேங்கடம், கரிவலம் வந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கார், வேன் மற்றும் வாடகை வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. சங்கரன் கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மாபெரும் பேரணி நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பாக தொடங்கிய இப்பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது, தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.