காஞ்சிபுரத்தில் செய்தி சேகரிக்கும் பணியின்போது ஜெயா டி.வி. செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் - வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் சங்கங்கள் டி.ஜி.பி.யிடம் புகார் மனு
Aug 19 2019 7:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனத்தின் நிறைவுநாளன்று செய்தி சேகரிக்கச் சென்ற ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் ஆகியோரை தாக்கி கேமராவை சேதப்படுத்திய வருண்குமார் ஐ.பி.எஸ். உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக டி.ஜி.பி.யிடம் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.