நாகை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் : 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
Aug 17 2019 8:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு முகாமில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மற்றும் வாழ்வாதாரம் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெறும் முகாமில் 7 ஆயிரம் தனியார் பணிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் நிலையில், இதில் மாவட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டபடிப்பு வரை பயின்ற 3 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கி வருகிறது.