பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு : தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
Aug 17 2019 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்புத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை அடுத்த ஆவடியில், தொழிலாளர்கள், குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 82 ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள டேங்க் பேக்டரி மற்றும் என்ஜின் பேக்டரி ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.