ஜெயா டிவி செய்தியாளர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் : செய்தியாளர் தாக்குதல் சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Aug 17 2019 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது எஸ்.பி. வருண்குமார் நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் வைபவ நிறைவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது நேற்று சிவில் சப்ளை எஸ்.பி. வருண்குமார் நடத்திய தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர் தாக்குதல் சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.