ஆளுங்கட்சியினருக்கே அரசின் நிவாரணப் பொருட்கள் : திருவாரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம்
Dec 12 2018 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளும் கட்சியினருக்கு மட்டுமே புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயல் தாக்கி 4 வாரங்கள் கடத்தபோதிலும் இன்று வரை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஒருசில பகுதிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள்கூட, அமைச்சர் காமராஜூக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டித்து, புலிவலம் பகுதியில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, மக்கள் விரோத எடப்பாடி அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்களின் சாலைப் போராட்டம் காரணமாக 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.