அரசு அதிகாரிகள் வராததால் மரங்களை அப்புறப்படுத்தும் இளைஞர்கள் : அரசு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை
Nov 19 2018 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களில் இளைஞர்களே களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜா புயலால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள அலிவலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், புயலால் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்களே சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் வரவில்லை எனவும், நிவாரணமும் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.