தஞ்சையில் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததால் குடிநீர் பஞ்சம் : பொதுமக்களை இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்
Nov 14 2018 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் இழுத்துச்சென்று கைது செய்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும், தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு இதுவரை தண்ணீர் வராததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாக்கு விலைகொடுத்து வாங்க வேண்டிய அவலத்திற்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள ஏரி, குளங்களும் வறண்டு கிடக்கும் நிலையில், தண்ணீர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்களும், விவசாயிகளும் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் முன்பு இன்று சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது, அவர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். மேலும், இதனை படம்பிடிக்க முயன்ற செய்தியார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.