குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட உறுதி ஏற்போம் : குழந்தைகள் தினத்தையொட்டி கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி
Nov 14 2018 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இந்நன்னாளில், குழந்தை செல்வங்கள் அனைவருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், தமது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகிழ்ச்சியின், அப்பழுக்கற்ற அன்பின் அடையாளங்களாக திகழும் குழந்தைகளே இவ்வுலகத்தின் எதிர்காலம் என குறிப்பிட்டுள்ளார். இறைவனின் அருட்கொடையாய் திகழும் குழந்தைகளுக்கு உரிய நல்ல சமூகத்தையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் சிறந்த கல்வியையும் ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் அறிவுத்தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து, புரட்சித்தலைவர், சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார் - மாண்புமிகு அம்மா அதனை விரிவுபடுத்தியதோடு, குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுவதாக திரு. டிடிவி தினகரன் சுட்டுக்காட்டியுள்ளார்.
குழந்தைகளுக்கெதிரான கொடுமைகளை எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன்,
"குழந்தைகளின் பொன்சிரிப்பால் இவ்வுலகம் நிறையட்டும்" "வருங்காலத்தை அவர்களின் கரம் படைக்கட்டும்" என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.