திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும்? - மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்‍கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

Nov 14 2018 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஏன் தேர்தல் நடத்தவில்லை என தமிழகத் தேர்தல் அதிகாரிக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்‍கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்‍கோரி, மதுரையைச் சேர்ந்த திரு. கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றக்‍ கிளையில் பொதுநல வழக்‍கு தொடுத்திருந்தார். இந்த வழக்‍கு நீதிபதிகள் திரு. சசிதரன்,​ திரு. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்‍கு வந்தது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன என்பது குறித்து அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வடகிழக்‍குப் பருவமழை காரணமாக இருதொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே, இவ்விரு தொகுதிகளுக்‍கும் இடைத்தேர்தலை நடத்துவதற்கு செய்யப்பட்டிருக்‍கும் நடவடிக்‍கைகள் மற்றும் தேர்தலுக்‍கான கால அட்டவணை குறித்த விவரங்களை வரும் 26ம் தேதிக்‍குள் பதில் மனுவாக தாக்‍கல் செய்யவேண்டுமென தமிழக தேர்தல் அதிகாரிக்‍கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00