தமிழகத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்குவை கட்டுப்படுத்த, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மற்றும் காவேரிப்பாக்கம் ஒன்றிய கழகம் சார்பில், பானாவரம் பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.என்.ஜி.பார்த்திபன், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பெண்கள், குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நிலவேம்பு குடிநீரை பருகிச் சென்றனர்.
திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் கடைவீதி பகுதியில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை, கழக அமைப்புச் செயலாளரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து கடைவீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர் திரு.வாசு, இளைஞரணி செயலாளர் திரு.பெஸ்ட் பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாகை வடக்கு மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் சார்பில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மேலையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டக்கழக செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன், ஒன்றியக்கழக செயலாளர்கள் திரு.கே.வி.ஜனார்த்தனம், திரு.ஜமாலுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம், ஓசூர் நகர கழகம் சார்பில், ஓசூரில் கழக செயலாளர் திரு.ஜெயசந்திரன் தலைமையில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரு.ரவிச்சந்திரன், திரு.சாச்சு பாய், திரு.நசீர்பாய், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் பரவி வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஒழிக்கும் விதமாக திருப்பூர் புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.சி.சண்முகவேலு தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட கழகம், மாநில எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலில் இருந்து மக்களை காக்கும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் திரு.மகேஷ், கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.வீ.டி. கலைச்செல்வன், உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நெய்வேலி நகர செயலாளர் திரு.ஜெயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.நெய்வேலி.ஐயப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.