பெண்களுக்கு பேசும் உரிமை உள்ளது என்பதன் ஒரு பகுதியாக உருவாகியுள்ள Me too-வை வரவேற்க வேண்டும் : நடிகை ரோகிணி பேட்டி
Oct 16 2018 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்களுக்கு பேசும் உரிமை உள்ளது என்பதன் ஒரு பகுதியாக உருவாகியுள்ள Me too-வை வரவேற்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில வரும் 19ம் தேதி கருத்துரிமை போற்றதும் என்ற தலைப்பில் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளதையொட்டி, அச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். கருத்துரிமையின் ஒரு பகுதியாக Me too-வை பார்ப்பதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகை ரோகிணி குறிப்பிட்டார்.
கருத்துரிமையை காப்பதற்காக நடத்தப்படும், கருத்துரிமை போற்றதும் என்ற தலைப்பிலான நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திரு. குமரேசன் கேட்டுக்கொண்டார்.