சிவகங்கையில் சிறுமி ஐஸ்வர்யா உலக சாதனை முயற்சியாக 29 நிமிடங்களில் 500 யோகாசனம் செய்து அசத்தல்
Sep 24 2018 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டத்தில், ஐஸ்வர்யா என்ற சிறுமி உலக சாதனை முயற்சியாக 29 நிமிடங்களில் 500 யோகாசனங்கள் செய்து அசத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில், உலக சாதனை முயற்சியாக 30 நிமிடங்களில் 500 யோகாசனங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 வயது சிறுமி ஜஸ்வர்யா 29 நிமிடங்களில் 500 யோகாசனங்களை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவர், ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட 30 நிமிடங்களில் 364 யோகாசன சாதனையை முறியடித்துள்ளார். சிறுமியின் இந்த சாதனை முயற்சியை அனைவரும் பாராட்டினர்.