கோத்தகிரியில் மலைவாழ் மாணவி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை
Aug 6 2018 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோத்தகிரியைச் சேர்ந்த மலைவாழ் மாணவி ஒருவர் குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோத்தகிரி பகுதியில், படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர், கோவையில் வேளாண் படிப்பை முடித்து, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தார். போக்குவரத்து தொழிலாளியான இவரது தந்தை ஓய்வு பெற்ற நிலையில், தனது படிப்பு செலவிற்காக தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து, அதன் மூலம் படித்து வந்துள்ளார். முதல் கட்டமாக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த இவர், தற்போது குரூப் 4 தேர்விலும் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில், ப்ரீத்தி தொடர்ந்து படித்து வருவது குறிப்பிடத்தக்கது. ப்ரீத்தியின் லட்சியம் நிறைவேற நாமும் அவரை வாழ்த்துவோம்.