கன்னியாகுமரியில் நாகர்கோவிலில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை : 46 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
Jul 19 2018 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து நடைபெற்ற சோதனையில் 46 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நாகர்கோவிலில் உள்ள கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 கிலோ போதை பாக்குகள் மற்றும் புகையிலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக இவற்றை விற்பனை செய்துவந்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர்.