தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அதிகாரம் குறித்த அரசாணையில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு -ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகக் கூறி, வைகோ தொடர்ந்த வழக்கையும் முடித்து வைத்தது நீதிமன்றம்
Jun 22 2018 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகக் கூறி வைகோ வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதேகோரிக்கையை முன்வைத்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு வழக்கறிஞர் திரு. விஜய் நாராயணன் எடுத்துரைத்தார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுடியாத அளவுக்கு கொள்கை முடிவு அடிப்படையில் இந்த ஆலை மூடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு சென்றாலும் திறக்க முடியாது என அவர் கூறினார். இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான திரு. வைகோவின் வழக்கை முடித்து வைப்பதாக கூறினார்.