மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் அம்மாவின் நல்லாட்சியை அமைக்கும் என்றும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொண்டு, திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றபோது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கல்லூர் திரு. வேலாயுதம் தலைமையில் பெருந்திரளான கழகத் தொண்டர்கள் மேள, தாளங்கள் உள்ளிட்ட இசைக் கருவிகள் முழங்க எழுச்சியுடன் வரவேற்றனர். திரு. டிடிவி தினகரனுக்கு, பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கரையிருப்பு பகுதியில் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கழகக் கொடியையும் ஏற்றிவைத்தார்.
இதனையடுத்து, தச்சநல்லூர் பகுதியில் இளைஞர்கள் ஒன்றுகூடி, ''டிடிவி என்னும் நான் விரைவில்'' என்ற வாசகங்களுடன் கூடிய T Shirt அணிந்தபடி வரவேற்பு அளித்தனர்.
பின்னர், திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், மறைந்த மாண்புமிகு அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவவோம் என்றும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னமும், கட்சியும் மீட்டெடுக்கப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, மக்கள் சந்திப்பு பயணத்தின் அடுத்தகட்டமாக திரு. டிடிவி தினகரன், பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது, குறிச்சி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலப்பாளையத்தில் இஸ்லாமிய பெருமக்களும், பெண்களும் திரளாகக் கூடி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். மேலக்கருங்குளம் பகுதியில், கிராம மக்கள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள, தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னீர்பள்ளம், தருவை, கோபாலசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் திரு. டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு பயணத்தின்போது ஏராளமான கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, வீரமநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், ஆழ்வார் குறிச்சி,உள்ளிட்ட இடங்களில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொட்டல் புதூரில் இஸ்லாமியமக்கள் திரு. டிடிவி தினகரனுக்கு எழுச்சிமிகு வரவேற்பளித்தனர். யானை மாலை சூட்ட கழக துணைப்பொதுச் செயலாளரை மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடயம் பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்கு வானவேடிக்கைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு மக்களிடையே திரு.டிடிவி தினகரன் எழுச்சி உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நிறைவு செய்த திரு.டிடிவி.தினகரன் குற்றாலம் சென்றார். அங்கு தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவர் திரு.ஆர்.எம்.நியமத்துல்லா தலைமையில் 50 பேர் அந்தக் கட்சியில் இருந்து விலகி திரு.டிடிவி.தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.