ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் மறைத்து வைக்கப்பட்டதாக எழுந்த புகார் - நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் - மேலும் 2 ஆயிரம்பேரை காணவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதால் பரபரப்பு
May 24 2018 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் மறைத்து வைக்கப்பட்டதாக எழுந்த புகாரில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் 2 ஆயிரம் பேரை காணவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 96 பேர் சட்டவிரோதமாக வல்லநாட்டில் உள்ள போலீஸ் துப்பாக்சுடுதளத்தில் மறைத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவர், தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், மறைத்து வைக்கப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும்படி, விளாத்திகுளம் மாஜிஸ்ட்ரேட் திரு. காளிமுத்துவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய மாஜிஸ்ட்ரேட் காளிமுத்து, அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருப்பது உண்மைதான் என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து, மறைத்து சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் 96 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி பகவதிஅம்மாள் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் இதுவரை 2 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.