தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கூடாது : மதிமுக தொண்டர் ஒருவர் செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி
May 24 2018 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கூடாது எனக்கூறி, மதிமுக தொண்டர் ஒருவர் செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திரு.திலகர் என்பவர் இன்று அதிகாலை அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரிகள் நடத்திய சமதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ம.திமு..க பொதுச் செயலாளர் திரு.வைகோ கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.