துப்பாக்கிசூட்டைக் கண்டித்து கடையடைப்பு - அரசுப் பேருந்துகள் நிறுத்தம் - தூத்துக்குடியில் வெறிச்சோடிக் காணப்படும் வீதிகள்

May 24 2018 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கொன்றுகுவித்த எடப்பாடி பழனிசாமியின் மக்‍கள் விரோத அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது, நேற்றுமுன்தினம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, பெண்கள் உட்பட 13 பேரை கொன்றுகுவித்த எடப்பாடி பழனிசாமி மக்‍கள் விரோத அரசைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுதும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கேட்டுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வணிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் துறையூர், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், காய்கறிகடைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனத்தினர் தங்களது கடைகளை அடைத்து தமிழக அரசுக்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00