கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : நிர்வாகிகள் பங்கேற்பு
Feb 22 2018 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி, பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்தநாள் விழா, அம்மா பேரவை சார்பில், வரும் 24ம் தேதி நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழா ஏற்பாடுகள் குறித்த கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பச்சைமால், அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், விழா ஏற்பாடுகள் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனிடையே, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கரங்களை வலுப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதிக்கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் நியமன ஆலோசனைக்கூட்டம் ஆலந்தூரில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ம.கரிகாலன் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் திரு. பழனியப்பன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.