ஆளுநரின் துதிபாடிகளாக செயல்படும் ஆளுங்கட்சியினர் - காளான்களைப் போல் வளர்ந்துவிட்ட அரசியல் தலைவர்கள் : இந்தியக் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
Feb 22 2018 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டையும் மக்களையும் பற்றி கவலைப்படாமல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். போன்றவர்கள் காளான்கள்போல் வளர்ந்திருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. சி. மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டையொட்டி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. சி. மகேந்திரன், தமிழகத்தில் ஆளுநரின் துதிபாடிகளாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். காவிரியில் தமிழகம் முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் இங்கு வருகை தருவது வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் மக்களையும், நாட்டையும் பற்றி கவலைப்படாத ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். போன்றவர்கள் காளான்களைப் போல் வளர்ந்துவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.