ராமநாதபுரத்தில் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் பறிமுதல் : 2 பேர் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்
Feb 22 2018 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சோதனை மேற்கொண்டதில் ஆவுடையார் கோவில் பகுதி அருகே நாட்டுப்படகில் 20 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 20 கிலோ தங்கம் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.