கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாடுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனின் அறிவுறுத்தியபடி, தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியக் கழகம் சார்பில், கழக செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருமழிசையில் நடைபெற்றது. இதில் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் திரு. பி. பழனியப்பன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை, கழக மாணவரணி செயலாளர் திரு. பொன்ராஜா உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இதேபோன்று திருவள்ளூர் ஒன்றியக் கழகம் சார்பில் தண்ணீர்குளத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் திரு. பி. பழனியப்பன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் மடப்பட்டில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. கே.ஜி.பி. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளையொட்டி ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் திரு. ராஜாமணி உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட மாற்று கட்சியினர் ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்டம் தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் மீனாட்சிபுரம் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு. கல்லூர் வேலாயுதம், மாநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் திரு. ஜெகநாதன் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா பிறந்தநாளையொட்டி, ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும் மருத்துவ முகாம், இரத்த தான முகாம், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன் உள்ளிட்ட கழகத்தினர் பலர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., மற்றும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்., அணிச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்திரமோகன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.