ஈரோட்டில் மதுபோதையில் தந்தை ஒருவர் மகனை சத்துணவு கூடத்திற்கு அனுப்பிவிட்டு, கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த வினோத சம்பவம்

Feb 22 2018 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில் மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது மகனை சத்துணவு கூடத்திற்கு அனுப்பிவிட்டு, கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு தயிர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசுந்தரம். மனைவி உயிரிழந்த நிலையில் தனது நான்கு வயது மகன் சசியுடன் வாழ்ந்து வரும் அவர், எந்நேரமும் மதுபோதையிலேயே இருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த ராமசுந்தரம், தனது மகன் சசியை அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்குள்ள கோயில் ஒன்றில் படுத்து உறங்கி எழுந்த அவர், மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சித்தோடு காவல் நிலையத்திற்கு சென்ற அவர், மகன் கடத்தப்பட்டதாகவும் புகார் அளித்தார். இதனையடுத்து தயிர்பாளையம் சென்ற போலீஸ் படையினர், பல மணி நேர தேடுதலுக்கு பிறகு, சத்துணவு கூடத்திலிருந்த சசியை அழைத்து வந்து ராமசுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.

மதுபோதையில் பெற்ற மகனை சத்துணவு கூடத்தில் விட்டது கூட தெரியாமல், மகன் கடத்தப்பட்டதாக தந்தையே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00