கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று நேரில் சந்தித்தனர்.
கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனை, நாள்தோறும் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து வருகின்றனர்.
சென்னை அடையாறில் உள்ள, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இல்லத்தில் இன்று, திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. டி.ஏ.ஏழுமலையின் புதல்வர் திரு.டி.ஏ.புகழேந்தி, தனது பிறந்த நாளை முன்னிட்டு, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.டி.ஏ.ஏழுமலை உடனிருந்தார்.
கழக அமைப்பு செயலாளர் திரு.வேலாயுதம், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.ராமு வெங்கடாசலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்தனர்.
மதுரை புறநகர் மாவட்டம் டி. கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எஸ். பாலகிருஷ்ணன், தனது மகன் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனிடம் திருமண அழைப்பிதழ் வழங்கினார். அப்போது, மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.இ.மகேந்திரன் உடனிருந்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்தனர்.
தேனி மாவட்டம் போடி தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை நேரில் சந்தித்தனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற திரு. எம்.ராமசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள திரு.கதிர்காமு உடனிருந்தார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கவிஞர் கண்ணதாசன் பேரனும், புதுமண தம்பதிகளுமான ஆதவ் கண்ணதாசன் - வினோதினி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனிடையே, இந்திய குடியரசுக்கட்சித் தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது மகள் திருமண விழாவில் பங்கேற்குமாறு, கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினார்.